» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 1:09:15 PM (IST)

சாத்தான்குளம் அருகே சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் நடுவக்குறிச்சி தாமரைமொழி வள்ளுவர் தெருவைச் சேர்ந்த முத்துவேல். பத்திரிகையாளர் சங்கத் தலைவராக உள்ளார். இவரது கபிலேஷ் (18). இவர், கொம்மடிக்கோட்டையில் உள்ள சங்கர பகவதி கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு, தனது பைக்கில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

தட்டார்மடம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த கபிலேஷை மீட்டுச் சிகிச்சைக்காகத் திசையன்விளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் உடற்கூறாய்வுக்காகச் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துத் தட்டார்மடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory