» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் ஓணம் பண்டிகை

செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:49:36 PM (IST)

OnamVocollage.jpg


தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை இன்று கோலகாலமாக கொண்டாடப்பட்டது.

விழாவில் கல்லூரி முதல்வர் வீரபாகு சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஓணம் பண்டிகையின் சிறப்புகள் பற்றி உரையாற்றினார். மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மகளிர் ஆலோசனை குழும பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மாணவ-மாணவிகள் வண்ண மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான அத்தப்பூக்கோலங்கள் அமைத்து மகிழ்ந்தனர். மேலும், கேரள பாரம்பரிய உடையணிந்து, திருவாதிரை நடனம் மற்றும் உற்சாகமான குழு நடனங்களை ஆடினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory