» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுபோதையில் தகராறு செய்த மகன் சரமாரியாக வெட்டிக்கொலை : தந்தை வெறிச்செயல்!

செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:41:52 AM (IST)

தூத்துக்குடி அருகே மதுபோதையில் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்த மகனைத் தந்தையே அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகிலுள்ள ஆதனூர் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (50). இவரது மகன் கருப்பசாமி (21). இவர் சரியாக வேலைக்குச் செல்லாமல், நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று இரவும் வழக்கம் போல மதுபோதையில் வீட்டிற்கு வந்த கருப்பசாமி, தந்தை மாரிமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மகனின் தொடர் தொந்தரவால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, தான் பெற்ற மகன் என்றும் பாராமல் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துச் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த கருப்பசாமி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த எப்போதும் வென்றான் காவல் நிலையப் போலீசார், கருப்பசாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தந்தை மாரிமுத்துவைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory