» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி நெய்தல் திருவிழாவில் குமரி கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் உயிரிழப்பு : திமுகவினர் நேரில் அஞ்சலி
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 12:43:12 PM (IST)
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் நெய்தல் திருவிழாவில் பங்கேற்க வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள ஆண்டிப்பொற்றைப் பகுதியைச் சேர்ந்த ரவியின் மகன் பிரசாந்த் (33). திருமணமாகாத இவர், 'குமரி கானகப் பறவைகள் கலைக்குழுவின்' ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வந்தார். தூத்துக்குடி வஉசி கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் நெய்தல் கலைத் திருவிழாவில் தனது குழுவினருடன் பங்கேற்பதற்காகப் பிரசாந்த் தூத்துக்குடி வந்திருந்தார்.
நேற்று கலை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகத் தயாராகிக் கொண்டிருந்த பிரசாந்த், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தபோது எதிர்பாராதவிதமாகத் திடீரெனக் கீழே சரிந்து விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பிரசாந்த் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக முக்கிய நிர்வாகிகள் நேரில் அஞ்சலி:
தகவலறிந்த திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி., தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்த பிரசாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது கலைக்குழுவினருக்கு ஆறுதல் கூறினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் ஓணம் பண்டிகை
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:49:36 PM (IST)

எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 2 நாட்கள் அவசரகால விடுப்பு: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:13:26 PM (IST)

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செல்போன், பணம் பறிப்பு - வாலிபர் கைது!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:48:46 AM (IST)

திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:34:00 AM (IST)

தூத்துக்குடியில் பஸ் நிலையம் அருகே செல்போன் பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:14:51 AM (IST)

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவருக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பாராட்டு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:02:37 AM (IST)








