» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஏரல் தாமிரபரணி பழைய தரைப்பாலத்தில் திடீர் பள்ளம்: வாகனப் போக்குவரத்துக்குத் தடை!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)

ஏரலில் உள்ள தாமிரபரணி ஆற்றின் பழைய தரைப்பாலத்தில் திடீரெனப் பள்ளம் ஏற்பட்டதால் கனரக வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் உள்ள தாமிரபரணி ஆற்றின் பழைய தரைப்பாலத்தில் திடீரெனப் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தொழில், கல்வி மற்றும் வியாபார நிமித்தமாக தினந்தோறும் ஏரலுக்கு வந்து செல்கின்றனர். தாமிரபரணி ஆற்றின் தென்பகுதியிலிருந்து ஏரலுக்கு வர மக்கள் ஆற்றின் உயர்மட்டப் பாலம் மற்றும் பழைய தரைப்பாலம் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி வந்தனர்.
பழைய தரைப்பாலத்தில் நடுவில் திடீரெனப் பெரிய பள்ளம் விழுந்துள்ளது. மேலும், இந்தப் பாலத்தின் இரு பக்கங்களிலும் பாதுகாப்பிற்கான தடுப்பு கம்பிகள் எதுவும் இல்லை. இவ்வழியாக அரசுப் பேருந்துகள், பள்ளி வாகனங்கள், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து சென்று வந்ததால், பெரிய அளவிலான விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. இது குறித்து புகார்கள் சென்றன.
புகாரின் பேரில், திருச்செந்தூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று மாலை தரைப்பாலத்தின் இரண்டு முகப்புகளிலும் தடுப்புக் கம்பிகளை அமைத்துப் போக்குவரத்தைத் தடை செய்தனர். விதிவிலக்காக இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் அளவிற்குச் சிறிய வழிவிட்டு மற்ற பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்து உள்ளிட்ட அனைத்துப் பெரிய வாகனங்களும் உயர்மட்டப் பாலம் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.
தரைப்பாலத்தில் விழுந்துள்ள பள்ளத்தைச் உடனடியாகச் சீரமைத்து, இருபுறமும் தடுப்புக் கம்பிகள் அமைத்து, இரவு நேரத்தில் தெளிவாகத் தெரியும் வகையில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டிப் போக்குவரத்தை மீண்டும் முழுமையாகத் தொடங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
BabuAug 16, 2026 - 07:22:54 PM | Posted IP 104.2*****
dance adura palam katunavan mela innum action ilaya
ஆனந்த்Aug 16, 2026 - 12:00:39 PM | Posted IP 162.1*****
எதற்கு திரும்பவும் சாகவா
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் ஓணம் பண்டிகை
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:49:36 PM (IST)

எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 2 நாட்கள் அவசரகால விடுப்பு: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:13:26 PM (IST)

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செல்போன், பணம் பறிப்பு - வாலிபர் கைது!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:48:46 AM (IST)

திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:34:00 AM (IST)

தூத்துக்குடியில் பஸ் நிலையம் அருகே செல்போன் பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:14:51 AM (IST)

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவருக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பாராட்டு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:02:37 AM (IST)









இது தான்Aug 17, 2026 - 09:15:05 AM | Posted IP 162.1*****