» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குற்ற வழக்குகளில் ஆஜராகாத பிரபல ரவுடி கைது : பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

வியாழன் 13, ஆகஸ்ட் 2026 7:56:28 AM (IST)

2 கொலை வழக்குகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி டி.வி.கே. நகர், 3-வது மைல் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிராஜன் என்ற வேலுசாமியின் மகன் காளியப்பன் என்ற 'காடை காளியப்பன்' (33). இவர் மீது ஆறுமுகனேரி, தூத்துக்குடி தெற்கு, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 2 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி உட்பட 20-க்கும் மேற்பட்ட தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளுக்குத் தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், காடை காளியப்பனுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட்  பிறப்பித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளர் ரென்னீஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது ஆறுமுகனேரி, ராஜாமணியபுரம் பகுதியில் ஒழிந்திருந்த காடை காளியப்பனைப் போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காடை காளியப்பனைத் தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory