» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 14-ல் உள்ளூர் விடுமுறை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

புதன் 12, ஆகஸ்ட் 2026 4:09:35 PM (IST)

KamanayakkTngovt.jpg

காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா பேராலயத் திருவிழாவினை முன்னிட்டு, வருகிற 14ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், காமநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தூய பரலோக மாதா பேராலயத் திருவிழாவினை முன்னிட்டு, வருகிற 14.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

ஆண்டுதோறும் ஆகஸ்டு 15-ஆம் நாள் கொண்டாடப்படும் இத்திருவிழாவின் 9-ஆம் நாள் திருவிழா (14.08.2026) உச்சகட்டமாக இருப்பதாலும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதாலும் மாணவர்களின் நலன் கருதி உள்ளூர் விடுமுறை வழங்க மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்திருந்தார். 

14.08.2026 அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கும் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) உள்ளூர் விடுமுறை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, 22.08.2026 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாகச் செயல்படும். 

இந்த விடுமுறை நாளானது செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவலகப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory