» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கடற்கரையில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடித் தர்ப்பணம்!

புதன் 12, ஆகஸ்ட் 2026 8:35:06 AM (IST)



ஆடி அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே திரண்டு புனித நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டான், குடும்பத்தில் அமைதியும் வளமும் பெருகும் என்பது நம்பிக்கை. இதனையொட்டி, இன்று அதிகாலை முதலே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய கடற்கரைப் பகுதிகளான திரேஸ்புரம், ரோச் பூங்கா கடற்கரை மற்றும் புதிய துறைமுகக் கடற்கரைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்ப சமேதராகக் கூடினர்.

கடலில் புனித நீராடிய பக்தர்கள், கடற்கரையில் அமர்ந்து புரோகிதர்கள் மூலமாகத் தங்கள் முன்னோர்களின் நினைவாகப் எள், தண்ணீர் தெளித்துத் தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து, முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையக் வேண்டிப் பிண்டம் கரைத்து சிறப்புப் பூஜைகள் செய்தனர்.

மேலும், கோவில்களிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. சுவாமி தரிசனம் செய்யக் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. ஆடி அமாவாசை வழிபாட்டையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை சார்பில் கடற்கரைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 


மக்கள் கருத்து

rajkumarAug 12, 2026 - 06:22:50 PM | Posted IP 162.1*****

kovilpatti karangalm enga poi kulipanga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory