» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 1 முதல் கைபேசி தடை உத்தரவு மேலும் தீவிரம்; மீறினால் பறிமுதல்!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:28:30 PM (IST)
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்குள் கைபேசி கொண்டு வருவதற்கான தடை விதிமுறைகள், நாளை (ஜூலை 1) முதல் மேலும் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை இருக்கை பிறப்பித்த உத்தரவின்படி, திருச்செந்தூர் கோயிலில் கடந்த 14.11.2022 முதல் கைபேசி பயன்பாட்டுத் தடை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவை முழுமையாகச் செயல்படுத்தும் பொருட்டு, 01.07.2026 முதல் இந்த விதிமுறைகள் மேலும் தீவிரமாக்கப்படுகின்றன. இதன்படி பொதுத் தரிசனம், ரூ.100 விரைவு தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வரிசை உள்ளிட்ட அனைத்து நுழைவு வழிகளிலும் பக்தர்கள் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
பரிசோதனையின்போது பக்தர்களிடம் கைபேசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவை பாதுகாப்பு நடைமுறைகளின்படி பறிமுதல் செய்யப்பட்டுத் திருக்கோயில் பாதுகாப்பு வைப்பகங்களில் வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் தங்களது கைபேசிகளைத் தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலோ அல்லது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், பக்தர்களின் வசதிக்காகக் கோயில் நிர்வாகம் சார்பில் பல இடங்களில் கைபேசி வைப்பிடங்கள் (Mobile Deposit Counters) ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த பாதுகாப்பு நடைமுறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் ஓணம் பண்டிகை
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:49:36 PM (IST)

எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 2 நாட்கள் அவசரகால விடுப்பு: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:13:26 PM (IST)

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செல்போன், பணம் பறிப்பு - வாலிபர் கைது!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:48:46 AM (IST)

திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:34:00 AM (IST)

தூத்துக்குடியில் பஸ் நிலையம் அருகே செல்போன் பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:14:51 AM (IST)

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவருக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பாராட்டு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:02:37 AM (IST)









G.PitchaiahJun 30, 2026 - 08:44:22 PM | Posted IP 104.2*****