» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விஷ மாத்திரை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை: மனைவியுடன் குடும்பத் தகராறில் சோகம்!

செவ்வாய் 23, ஜூன் 2026 11:28:59 AM (IST)

முறப்பநாடு அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த வாலிபர் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் எல்லைக்குட்பட்ட கீழசெக்காரக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அதிமூலபெருமாள் மகன் காளிபெருமாள். சமையல் வேலை செய்து வந்த இவருக்குத் திருமணமாகி ஒரு வருடமே ஆகிறது. காளிபெருமாளுக்கும் இவருடைய மனைவிக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாகத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனால் மன வருத்தத்தில் இருந்த காளிபெருமாள், கொம்புகாரநத்தம் குளத்தங்கரைப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு, உளுந்து மூட்டைக்குப் பயன்படுத்தப்படும் விஷ மாத்திரையை எடுத்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.விஷம் உடல் முழுவதும் பரவிய நிலையில் குளத்தங்கரையில் அவர் மயங்கிக் கிடந்துள்ளார். 

இதனைத் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு, அவசர சிகிச்சைக்காகத் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர், காளிபெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory