» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கண்மாய் நீர் பிரச்சினையில் இரு வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு: இருவர் கைது!
செவ்வாய் 23, ஜூன் 2026 7:49:23 AM (IST)
விளாத்திகுளம் அருகே கண்மாயில் ஆடுகள் தண்ணீர் குடிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில், இரண்டு வாலிபர்களை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காடல்குடி அருகேயுள்ள நூத்தலக்கரை மற்றும் சின்னையாபுரம் ஆகிய கிராமங்களுக்குப் பொதுவான கண்மாய் ஒன்றை இரு கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கண்மாய் தண்ணீரைப் பயன்படுத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்துள்ளது.
சின்னையாபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பாலமுருகன் (24), ஆறுமுகம் மகன் பிரவீன்குமார் (21) ஆகியோர் தங்களது ஆடுகளை அந்த கண்மாய்க்கு ஓட்டிச் சென்று தண்ணீர் குடிக்க வைக்க முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்த நூத்தலக்கரை கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆடுகள் தண்ணீர் குடிக்கக் கூடாது எனத் தடுத்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் ஆடுகளைக் கிராமத்திற்கு ஓட்டிச் சென்றுவிட்டனர்.
அன்று இரவு 7 மணியளவில் நூத்தலக்கரை கிராமத்தைச் சேர்ந்த சிலர் பாலமுருகன் மற்றும் பிரவீன்குமாரைச் செல்போனில் அழைத்து, சமாதானம் பேச வருமாறு கூறியுள்ளனர். அதனை நம்பி அங்குச் சென்ற இருவரையும் ஒரு கும்பல் திடீரென அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இதில் காயமடைந்த இருவரையும் சின்னையாபுரம் கிராம மக்கள் மீட்டு, தீவிர சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துக் காடல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நூத்தலக்கரை கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், சரவணன் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரைத் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் இரு கிராமங்களிலும் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கப் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








