» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
செவ்வாய் 23, ஜூன் 2026 7:37:24 AM (IST)
நாசரேத்தில் ஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரைச் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள வாழையடி முதல் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (29). தொழிலாளியான இவர், இரண்டு தினங்களுக்கு முன்பு நாசரேத் பேருந்து நிலையத்தில் மது போதையில் சுற்றித் திரிந்துள்ளார்.
பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தில் பயணித்த 17 வயது சிறுமிக்கு வெங்கடேஷ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி சத்தமிட்டுக் கூச்சலிட்டுள்ளார்.
சிறுமியின் சத்தம் கேட்டு உஷாரான பேருந்து பயணிகள், வெங்கடேஷை மடக்கிப் பிடித்து நாசரேத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சகாய சாந்தி தீவிர விசாரணை நடத்தி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வெங்கடேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








