» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!

செவ்வாய் 23, ஜூன் 2026 7:37:24 AM (IST)

நாசரேத்தில் ஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரைச் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள வாழையடி முதல் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (29). தொழிலாளியான இவர், இரண்டு தினங்களுக்கு முன்பு நாசரேத் பேருந்து நிலையத்தில் மது போதையில் சுற்றித் திரிந்துள்ளார். 
பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தில் பயணித்த 17 வயது சிறுமிக்கு வெங்கடேஷ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி சத்தமிட்டுக் கூச்சலிட்டுள்ளார்.

சிறுமியின் சத்தம் கேட்டு உஷாரான பேருந்து பயணிகள், வெங்கடேஷை மடக்கிப் பிடித்து நாசரேத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சகாய சாந்தி தீவிர விசாரணை நடத்தி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வெங்கடேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory