» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: இருவர் கைது, 232 மது பாட்டில்கள் பறிமுதல்!
திங்கள் 22, ஜூன் 2026 8:08:20 PM (IST)

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 232 மது பாட்டில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன!
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லெவிஞ்சிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் லெவிஞ்சிபுரம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அங்குச் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட பாத்திமா நகரைச் சேர்ந்த லிவிங்ஸ்டன் என்ற வில்லிங்டன் (36) மற்றும் மேல சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த மரிய சூசை ராஜ் (36) ஆகிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 232 மது பாட்டில்கள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








