» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திங்கள் 22, ஜூன் 2026 3:23:35 PM (IST)



தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆரோக்கிய ஜென்ஸி, மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவர்களின் பாதுகாப்பு, சட்ட உரிமைகள், சைபர் குற்றங்கள் மற்றும் இணையவழி மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருப்பதன் அவசியம் குறித்து விரிவாக விளக்கினார்.

பாலியல் தொல்லைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான தகவல்களை எவ்வித பயமுமின்றி, உடனடியாகக் காவல் துறைக்குத் தெரிவிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

அவசர காலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பு கொண்டு உடனடியாக உதவி பெறுவதற்கான முக்கியச் சேவை எண்களான 100 (காவல் துறை), 181 (மகளிர் உதவி எண்), 1098 (குழந்தைகள் உதவி எண்) மற்றும் 1930 (சைபர் குற்றப் புகார் எண்) ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பெண் காவலர்கள் செல்வகுமாரி, சந்தனமாரி, காவலர் அசாருதீன் மற்றும் முதுகலை ஆசிரியர் மரகதவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான முழுமையான ஏற்பாடுகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory