» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிரீன் காப்பர் விவகாரங்களை அரசியல் ஆக்கக் கூடாது : மீனவர் சங்கம் கோரிக்கை மனு!

திங்கள் 22, ஜூன் 2026 3:15:06 PM (IST)



மதிமுக, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தூத்துக்குடியில் நடத்தவுள்ள சுற்றுச்சூழல் பொதுக்கூட்டத்திற்குத் தகுந்த நிபந்தனைகள் விதிக்கக் கோரி, தூத்துக்குடி நாட்டுப்படகு இறால் மீன்பிடித் தொழிலாளர் நலச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.  

சங்கத்தின் தலைவர் சந்தா பார்பர் மற்றும் செயலாளர் சம்சுதீன் தலைமையிலான மீனவப் பிரதிநிதிகள் அளித்துள்ள அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:  தற்போது உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஸ்டெர்லைட் மற்றும் 'கிரீன் காப்பர்' திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் அரசியல் ரீதியாகப் பேசப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.  

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளைப் பொதுவெளியில் பேசி அரசியல் ஆக்குவது, மாவட்டத்தில் நிலவும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்துத் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும். சுற்றுச்சூழல் கவலைகளுக்காகத் தொழில்களை ஒட்டுமொத்தமாக மூடுவதற்குப் பதிலாக, புதிய அறிவியல் தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம் தீர்வு காண வேண்டும். ஏனெனில், இது ஆயிரக்கணக்கான மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாகும்.  

எனவே, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்குக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கினாலும், நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விவகாரங்கள் குறித்துப் பொதுக்கூட்டத்தில் அரசியல் பேச்சுக்கள் பேசக் கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory