» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
படுக்கையறையில் வாலிபர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை!
திங்கள் 22, ஜூன் 2026 10:40:02 AM (IST)
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த வாலிபர் படுக்கையறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி மேற்கு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மகன் சுடலை குமார் (35). கூலித் தொழிலாளியான இவருக்குக் கோமதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஜூன் 20-ஆம் தேதி சுடலை குமாரின் மனைவி கோமதி, தனது மகனை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்றுள்ளார்.
இதனால் சுடலை குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு கோமதி கோவிலில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் வீட்டுக்குள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் சுடலை குமார் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அலறித் துடித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுடலை குமாரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வு மற்றும் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுடலை குமார் அதிகப்படியான மதுப் பழக்கத்தினால் இறந்தாரா அல்லது அவரது மரணத்தின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா என்பது குறித்துத் தாளமுத்து நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மாப்பிள்ளையூரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








