» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓமனில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் மனைவிக்கு அரசு வேலை: அமைச்சர் ஸ்ரீநாத் நடவடிக்கை!
ஞாயிறு 21, ஜூன் 2026 1:09:22 PM (IST)

ஓமன் நாட்டில் கப்பலில் பணியாற்றியபோது உயிரிழந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாலுமி நிஷாந்தின் மனைவிக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தில் தற்காலிக இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி குரூஸ்புரத்தைச் சேர்ந்தவர் மாலுமி நிஷாந்த். இவர் ஓமன் கார்மோஸ் கடற்பரப்பில் உள்ள கப்பல் ஒன்றில் பணியாற்றி வந்தபோது, அத்தியாவசிய மற்றும் அவசர மருத்துவ உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கப்பலிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நிஷாந்தின் உடல் இதுவரை தமிழகத்திற்கு வந்து சேராத நிலையில், அவரது மனைவி சராபின் தனது பத்து மாத ஆண் குழந்தை மற்றும் மூன்று வயது பெண் குழந்தையுடன் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தார். தங்களது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தனக்கு ஏதேனும் ஒரு அரசுப் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் ஜூன் 19-ஆம் தேதி சராபின் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
அவரது மனுவை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ஸ்ரீநாத், உடனடியாக அதனைப் பரிசீலனை செய்யப் பரிந்துரைத்தார். அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், சராபின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் கருணை அடிப்படையில் மனு உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சராபினுக்குத் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் தூத்துக்குடி மேலாளர் அலுவலகத்தில் வெளிமுகமை நிறுவனம் (Outsourcing) வழியாகத் தொகுப்பு ஊதிய அடிப்படையில், தற்காலிக இளநிலை உதவியாளர் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைத் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் விஜயகார்த்திகேயன் ஜூன் 20-ஆம் தேதி சனிக்கிழமை வெளியிட்டுள்ளார். அமைச்சரின் இந்தப் பரிந்துரையும், நிர்வாகத்தின் அதிவிரைவான இந்த மனிதநேய நடவடிக்கையும் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








