» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஜூன் 16-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சனி 13, ஜூன் 2026 7:50:18 PM (IST)
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தூத்துக்குடி மாநகரில் வருகிற 16-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) குடிநீர் விநியோகம் இருக்காது எனத் மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களுக்கு மின் விநியோகம் வழங்கும் கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில், வருகிற 16.06.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக, அன்றைய தினம் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என்பதால், தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாநகரப் பகுதி பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீரை முன்னதாகவே சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், அன்றைய தினம் குடிநீரை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறும் மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.77 கோடி சமரசத் தொகை வழங்கல்!
சனி 13, ஜூன் 2026 9:33:23 PM (IST)

வெறும் கம்பமாக நிற்கும் செக்போஸ்ட் சிசிடிவி : ஆவணங்களின்றிப் பறக்கும் லாரிகள்!
சனி 13, ஜூன் 2026 9:21:41 PM (IST)

நிகிலேசன்நகர் மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் : மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் மனு!
சனி 13, ஜூன் 2026 7:45:03 PM (IST)

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப் பணிகள் - ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
சனி 13, ஜூன் 2026 7:35:59 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!
சனி 13, ஜூன் 2026 12:06:32 PM (IST)

பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: வாலிபர் பலி; பெண் உட்பட 3 பேர் படுகாயம்
சனி 13, ஜூன் 2026 11:00:30 AM (IST)









