» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து சிசிடிவி கேமராவை உடைத்த ரவுடி : டிஎஸ்பியிடம் புகார்!
வெள்ளி 12, ஜூன் 2026 9:53:50 PM (IST)
அம்மன்புரம் அருகே கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததுடன், கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை உடைத்துத் தலைமறைவாக உள்ள ரவுடியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர
அம்மன்புரம் அருகே உள்ள முத்துமாலைவிளையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சங்கர் (30). இவர் அம்மன்புரத்தில் உள்ள டீ கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10-ஆம் தேதி இரவு சங்கர் வேலை முடித்துவிட்டுத் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
முத்துமாலைவிளை பிள்ளையார் கோவில் அருகே சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுரேஷ் (47) என்பவர் போதை தலைக்கேறிய நிலையில் எதிரே வந்துள்ளார். அவர் திடாரென சங்கரை வழிமறித்து அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அத்துடன் நிற்காமல், கிராம மக்களின் பாதுகாப்புக்காக ஊரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை அடித்து உடைத்த சுரேஷ், அங்குத் திரண்ட கிராம மக்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள சுரேஷ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, முத்துமாலைவிளையைச் சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஸைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், "ரவுடி சுரேஷால் எங்கள் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம்; எனவே அவர் மீண்டும் வெளியே வராதவாறு கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட டிஎஸ்பி நிரேஷ், பொதுமக்களுக்கு இனி அவராலோ அல்லது வேறு நபர்களாலோ எந்தவொரு அச்சுறுத்தலும் வராத வகையில், ரவுடி சுரேஷ் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இச்சம்பவம் முத்துமாலைவிளை மற்றும் குரும்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








