» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் என்டிபிஎல் நிறுவனத்தின் சார்பில் புதிய அரங்குகள் திறப்பு!

வியாழன் 21, மே 2026 12:25:31 PM (IST)



தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என்டிபிஎல் நிறுவனத்தின் சார்பில் சீரமைக்கப்பட்ட அரங்குகள் திறப்பு விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல ஆண்டுகளாக என்டிபிஎல் நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதி பங்களிப்பின் மூலம் நோயாளிகளுக்குச் சிறப்பான முறையில் உயர்தரச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் முடநீக்கியல், மகப்பேறு, மயக்கவியல் மற்றும் அறுவைச் சிகிச்சைத் துறைகளுக்கு ஏராளமான நவீன உபகரணங்கள் இதன் மூலம் பெறப்பட்டுள்ளன.

இக்கல்லூரியின் செமினார் அறை மற்றும் விரிவுரையாளர் அறை ஆகியவற்றைச் சீரமைப்பதற்காக என்டிபிஎல் நிறுவனம் சார்பில் ரூ.1.02 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.3 கோடியே 19 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று (மே 21) காலை நடைபெற்ற விழாவில் சீரமைக்கப்பட்ட அரங்குகள் என்டிபிஎல் நிர்வாகத்தால் மருத்துவக் கல்லூரிக்கு முறைப்படி அர்ப்பணிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் என்டிபிஎல் நிறுவன சிஇஓ அரவிந்த ராஜா, மருத்துவக் கல்லூரி முதல்வர் பத்மநாபன், துணை முதல்வர் கலைவாணி, ஆர்.எம்.ஓ, நிலைய மருத்துவ அதிகாரி சைலஸ் ஜெயமணி, முடநீக்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் பாவலன், முன்னாள் முதல்வர் சிவகுமார், துணை நிருவாகி குமரன், சிஇஓ ஆனந்தராமானுஜம் மற்றும் என்டிபிஎல் சிஎஸ்ஆர் நோடல் அதிகாரி ரகுபதி, அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory