» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்பத் தகராறில் விஷம் குடித்த விவசாயி சாவு!

ஞாயிறு 24, மே 2026 2:00:56 PM (IST)

தூத்துக்குடி அருகே செட்டிஊரணி கிராமத்தில், மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி தட்டப்பாறை அருகே செட்டிஊரணி, கீழத்தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் முத்துக்குமார் (45). விவசாயி, கடந்த மே 21-ஆம் தேதி முத்துக்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த முத்துக்குமார், வீட்டில் வைக்கப்பட்டிருந்த விவசாயத்திற்குப் பயன்படுத்தும் கடுமையான களைக்கொல்லி விஷ மருந்தை எடுத்து குடித்துள்ளார்.

அவர் விஷம் குடித்து மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு உடனடியாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

பின்னர் மீண்டும் இன்று அதிகாலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாகக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், வரும் வழியிலேயே முத்துக்குமாரின் உயிர் பிரிந்தது. இதுகுறித்துத் தட்டப்பாறை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory