» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உடைகள், கையுறைகள் : மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

ஞாயிறு 24, மே 2026 12:42:00 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள், கையுறைகள் மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் அடையாள அட்டைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தேவையான பிரத்யேகப் பாதுகாப்பு உடைகள், கையுறைகள் மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் மருத்துவப் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலை வகித்தார். திமுக வட்டச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதிச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன், பகுதிச் செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் கனகராஜ் உட்பட மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory