» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேசிய நெடுஞ்சாலையில் பைக் விபத்து: வாலிபர் பலி!

வியாழன் 21, மே 2026 11:54:05 AM (IST)

கயத்தாறு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் சுரேஷ்குமார் (40). இவர் கடந்த மே 17-ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது வாகனம் திடீரென நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. 

இவ்விபத்தில், தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சுரேஷ்குமார் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில், இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கயத்தாறு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory