» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண் வெட்டிக் கொலை: 2பேர் கைது!

வியாழன் 21, மே 2026 10:52:28 AM (IST)

தூத்துக்குடியில் பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வழக்கில் 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி அண்ணா நகர், 12-ஆவது தெரு, மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த பூபால் ராஜா என்பவரது மனைவி அமுதா (50). பூபால் ராஜா ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வரும் நிலையில், இம்பதியினர் தங்களது வீட்டின் முன்பாகப் பழைய இரும்பு மற்றும் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்களது மகன் அருண்குமார், தனது மனைவி சரஸ்வதி (29) மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

அருண்குமார் மது போதையில் அடிக்கடி குடும்பத்தில் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அருண்குமாருக்கும், அவரது மனைவி சரஸ்வதிக்கும் இடையே வழக்கம் போல் கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த அமுதா தனது மகனான அருண்குமாருக்கு ஆதரவாகப் பேசியதாகத் தெரிகிறது. 

இதனால் மருமகள் தரப்பிற்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நேற்று புதன்கிழமை அமுதா வழக்கம் போல் தனது மளிகைக் கடையில் வியாபாரப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர், பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அமுதாவைச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த அமுதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து சிப்காட் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கினர். 

முதற்கட்ட விசாரணையின்படி, இந்தத் தாக்குதல் சம்பவத்தில் அருண்குமாரின் மனைவி சரஸ்வதியின் சகோதரரான சங்கர் (32) என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமுதா சிகிச்சை பலபின்றி இறந்தார். இதையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி, சங்கர் மற்றும் அவரது நண்பர் மதன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory