» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!

புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)



10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில், தூத்துக்குடி தாமோதரநகர் DMNS. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பதின்ம மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்பள்ளியில் தேர்வு எழுதிய 108 மாணவர்களும் முழுமையாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் ச.சந்தோஷ் குமார் 493/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவர்கள் R.தீபக் கண்ணன், S.பிரணீஷ் ஆகியோர் 492 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், மாதி B.சிவ ரஞ்சனி 490 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

பாட வாரியாக அறிவியல் பாடத்தில் 8 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 2 மாணவிகளும் 100/100 மதிப்பெண்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர்.பள்ளி அளவில் 400 மதிப்பெண்களுக்கு மேல் 37 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் தெக்ஷிணமாற நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே. காளிதாசன் நாடார், பள்ளி தாளாளர் எஸ்.ஆர்.எஸ். உமரிசங்கர் நாடார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் நேரில் பாராட்டி, முதலிடம் பிடித்த மாணவருக்கு ரொக்கப்பரிசு வழங்கிச் சிறப்பித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory