» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில், தூத்துக்குடி தாமோதரநகர் DMNS. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பதின்ம மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 108 மாணவர்களும் முழுமையாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் ச.சந்தோஷ் குமார் 493/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவர்கள் R.தீபக் கண்ணன், S.பிரணீஷ் ஆகியோர் 492 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், மாதி B.சிவ ரஞ்சனி 490 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
பாட வாரியாக அறிவியல் பாடத்தில் 8 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 2 மாணவிகளும் 100/100 மதிப்பெண்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர்.பள்ளி அளவில் 400 மதிப்பெண்களுக்கு மேல் 37 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் தெக்ஷிணமாற நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே. காளிதாசன் நாடார், பள்ளி தாளாளர் எஸ்.ஆர்.எஸ். உமரிசங்கர் நாடார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் நேரில் பாராட்டி, முதலிடம் பிடித்த மாணவருக்கு ரொக்கப்பரிசு வழங்கிச் சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் என்.பெரியசாமி 9ஆம் ஆண்டு நினைவு தினம் : திமுகவினர், குடும்பத்தினர் மரியாதை!
செவ்வாய் 26, மே 2026 5:48:43 PM (IST)

ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டம்: ஆதரவளிக்க சென்றவர்கள் கைது!
செவ்வாய் 26, மே 2026 5:38:29 PM (IST)

சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு: இணையதளம் தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 26, மே 2026 3:23:11 PM (IST)

தூத்துக்குடி வளர்ச்சிக்கு மோடி அரசு தந்துள்ள திட்டங்கள்: தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பட்டியல்!
செவ்வாய் 26, மே 2026 3:13:30 PM (IST)

தவறவிட்ட 16 பவுன் தங்க நகைகள் 1 மணி நேரத்தில் மீட்பு : உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்..!
செவ்வாய் 26, மே 2026 11:45:52 AM (IST)

வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை!
செவ்வாய் 26, மே 2026 11:37:59 AM (IST)










