» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக்கை சேதப்படுத்தியவர் கைது!
திங்கள் 30, மார்ச் 2026 9:10:19 AM (IST)
தூத்துக்குடியில் தகராறில், தனியார் நிறுவன ஊழியரின் பைக்கை சேதப்படுத்திய நபரைத் தென்பாகம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்தவர் ராஜூ (30). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று தனது மோட்டார் சைக்கிளில் அண்ணா நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கண்ணபிரான் என்பவருக்கும், ராஜூவிற்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுத் தகராறாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த கண்ணபிரான், சாலையோரம் கிடந்த பெரிய கல்லை எடுத்து ராஜூவின் மோட்டார் சைக்கிள் மீது வீசினார். இதில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தது. இந்தச் சம்பவம் குறித்து ராஜூ அளித்த புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டு வாகனத்தைச் சேதப்படுத்திய குற்றத்திற்காகக் கண்ணபிரானைப் போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் லாரி மோதியதில் 26 ஆடுகள் பரிதாப சாவு
திங்கள் 30, மார்ச் 2026 4:57:41 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட 3 பேர்கள் வேட்பு மனுதாக்கல்
திங்கள் 30, மார்ச் 2026 4:50:14 PM (IST)

சிவன்கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்த நபர்கள் மீது நடவடிக்கை: இந்து முன்னணி
திங்கள் 30, மார்ச் 2026 2:32:55 PM (IST)

தூத்துக்குடியில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது!
திங்கள் 30, மார்ச் 2026 9:22:07 AM (IST)

பூட்டிய வீட்டுக்குள் விவசாயி சடலம்: தற்கொலைக்குத் தூண்டியதாக கடிதம்!
திங்கள் 30, மார்ச் 2026 9:07:20 AM (IST)

நெல்லை - தூத்துக்குடி நேரடி ரயில் பாதை: தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி!
திங்கள் 30, மார்ச் 2026 9:00:27 AM (IST)







