» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதிமுக மாநில நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்
திங்கள் 9, மார்ச் 2026 8:00:44 AM (IST)

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில கலைத்துறை துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த கோடையடி ராமச்சந்திரன், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
கோவில்பட்டியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ. ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் அவர் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அவருக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கட்சித் துண்டு அணிவித்து வரவேற்பு அளித்தார்.
கட்சியிலிருந்து விலகியது குறித்துக் கோடையடி ராமச்சந்திரன் கூறுகையில், மதிமுகவின் தற்போதைய செயல்பாடுகளில் திருப்தி இல்லாததாலும், அதிமுகவின் மக்கள் நலப் பணிகளால் ஈர்க்கப்பட்டும் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயிகளிடம் ரூ.1.5 கோடி மோசடி: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:02:44 PM (IST)

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
திங்கள் 9, மார்ச் 2026 3:29:07 PM (IST)

தூத்துக்குடி எண்ணெய் ஆலை வளாகத்தில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு பணிகள் தீவிரம்
திங்கள் 9, மார்ச் 2026 12:57:56 PM (IST)

மக்காச்சோளத்திற்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 12:33:13 PM (IST)

தூத்துக்குடியில் உலக மகளிர் தின விழா: அமைச்சர் கீதா ஜீவன் விருது வழங்கினார்
திங்கள் 9, மார்ச் 2026 11:01:23 AM (IST)

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்: அமைச்சர் கீதா ஜீவன்
திங்கள் 9, மார்ச் 2026 10:26:43 AM (IST)







