» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

ஞாயிறு 8, மார்ச் 2026 9:41:54 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஐந்து நபர்கள், ஒரே நாளில் 'தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்' கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய கோவில்பட்டியைச் சேர்ந்த அசோக் (எ) அய்யாதுரை (27) மற்றும் வேல்முருகன் (34) ஆகிய இருவர் மீதும்; ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் தொடர்புடைய ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த தண்டபாணி (23), மலையாண்டி (39) மற்றும் தங்கதுரை (எ) தங்கையா (22) ஆகிய மூவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்தனர்.

காவல் ஆய்வாளர்களின் கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன், சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் பரிந்துரை செய்தார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில், நேற்று (07.03.2026) மேற்படி ஐந்து நபர்களும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாவட்டத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீது இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory