» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நாய் கடித்து 14 பணியாளர்கள் காயம்!
வெள்ளி 6, மார்ச் 2026 3:22:22 PM (IST)
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தெரு நாய்கள் கடித்து 14 பணியாளர்கள் காயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் கடந்த இரண்டு தினங்களாகத் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அனல்மின் நிலைய உட்புற வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்கள், அங்கு பணியில் இருந்த ஊழியர்களைத் திடீரெனத் தாக்கியுள்ளன.
நேற்றும், இன்றுமாகச் சேர்த்து மொத்தம் 14 பணியாளர்களை நாய்கள் கடித்ததில் அவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்குத் தேவையான தடுப்பூசிகளும் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளன.
வளாகத்திற்குள் நாய்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பணியாளர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனல்மின் நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 7, மார்ச் 2026 8:48:07 AM (IST)

தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 பேர் கைது!
சனி 7, மார்ச் 2026 8:42:28 AM (IST)

வீடுபுகுந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
சனி 7, மார்ச் 2026 8:29:41 AM (IST)

ஆழ்வார்திருநகரி கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
சனி 7, மார்ச் 2026 8:27:44 AM (IST)

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)









