» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 பேர் கைது!

சனி 7, மார்ச் 2026 8:42:28 AM (IST)

தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரைப் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயிலைப் பதுக்கி வைத்திருந்த 3 பேரை மத்திய போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக, மத்திய போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு சார்பு ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த மூன்று நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த ரமேஷ்நாதன் (39), தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த சசிகுமார் (37), காயல்பட்டினம் சிங்கித்துறையைச் சேர்ந்த சிலுவை பிரின்ஸ் (20) என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய சோதனையில், சர்வதேசச் சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா ஆயில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, அந்த போதைப்பொருள் எண்ணெயைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இம்மூன்று பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்: 3-இல் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory