» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!

வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)


தூத்துக்குடி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் ஆட்சியர் க. இளம்பகவத் நேரில் ஆய்வு செய்தார். 

தமிழ்நாட்டில் 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இன்று (05.03.2026) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டையில் உள்ள T.D.T.A. P.S. பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு மாணாக்கர்கள் அமைதியான முறையில் தேர்வு எழுதுவதை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து அவர், வல்லநாடு வி.றி.வி.டி அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் மாணாக்கர்கள் தேர்வு எழுதுவதை பார்வையிட்டார். ஆய்வின் போது, தேர்வு அறைகளில் போதிய வெளிச்சம், காற்றோட்டம் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.

தேர்வுகள் முறைகேடுகளின்றி நடப்பதை உறுதி செய்ய நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படைகளின் செயல்பாடுகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மாணாக்கர்களுக்குத் தேவையான மருத்துவ முதலுதவி மற்றும் இதர சுகாதார ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory