» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!

வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 209 சப்-இன்ஸ்பெக்டர்களை மாவட்டத்தை விட்டு வெளியே இடமாற்றம் செய்து, நெல்லை சரக டி.ஐ.ஜி முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.

தமிழக தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாவட்ட அளவிலான அதிகாரிகளாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் தங்களது சொந்தத் தொகுதியிலோ, அல்லது ஒரே தொகுதியில் 3 ஆண்டுகளுக்கு மேலாகவோ பணியாற்றி இருந்தால், அவர்களை மாவட்டத்திற்குள்ளேயே வேறு தொகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 209 சப்-இன்ஸ்பெக்டர்கள் வெளி மாவட்டங்களுக்கும், அதேபோல் வெளி மாவட்டங்களிலிருந்து தூத்துக்குடிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் அண்மையில்தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

தற்போது தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவின்படி, வெளி மாவட்டங்களுக்கான இடமாற்ற உத்தரவை ரத்து செய்யுமாறு தென்மண்டல ஐ.ஜி, அனைத்துக் காவல் ஆணையர்கள் மற்றும் டி.ஐ.ஜி-க்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக, வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் தொடர்ந்து அதே இடத்திலேயே பணியாற்றி வருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory