» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 10 மாடி காவலர் குடியிருப்பு திறப்பு விழா : எஸ்பி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்!
புதன் 4, மார்ச் 2026 4:04:36 PM (IST)

தூத்துக்குடி பிரையன்ட் நகரில் 100 வீடுகள் கொண்ட காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் (திருநெல்வேலி கோட்டம்) மூலம் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 10 மாடி அடுக்குமாடி காவலர் குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். மொத்தம் 100 வீடுகளைக் கொண்ட இந்த நவீன குடியிருப்புகள், காவலர்களின் நலன் கருதி அரசு உத்தரவின் பேரில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் தொடக்க விழாவைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன், புதிய குடியிருப்பில் குத்துவிளக்கேற்றி முறைப்படி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் குமரேசன், தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் ராகுல் வி.கோபால், நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்பட முக்கியப் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)

டிசிடபிள்யூ நிறுவனத்தில் 55-வது தேசிய பாதுகாப்பு தின விழா
வியாழன் 5, மார்ச் 2026 8:07:30 AM (IST)

திருச்செந்தூர் அவதார பதியில் அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தின விழா கோலாகலம்!
வியாழன் 5, மார்ச் 2026 8:00:43 AM (IST)

காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி மதன் நேரடி விசாரணை
புதன் 4, மார்ச் 2026 8:14:22 PM (IST)









