» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளச் சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:51:26 AM (IST)

தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் கிராமத்தில், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பெரிய சாரைப்பாம்பால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் கிராமம் வடக்கு தெருவில் வசிப்பவர் பொன்செல்வம். இவரது வீட்டின் சமையலறைக்குள் இன்று திடீரென 6 அடி நீளமுள்ள பெரிய சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியேறி கதவைப் பூட்டினர்.
உடனடியாக இது குறித்துச் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
சமையலறையில் பதுங்கி இருந்த அந்தப் பாம்பைத் தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு லாவகமாகப் பிடித்து மீட்டனர். பிடிபட்ட பாம்பு பின்னர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. பாம்பை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்குப் பொன் செல்வத்தின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் கிராமம் வடக்கு தெருவில் வசிப்பவர் பொன்செல்வம். இவரது வீட்டின் சமையலறைக்குள் இன்று திடீரென 6 அடி நீளமுள்ள பெரிய சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியேறி கதவைப் பூட்டினர்.
உடனடியாக இது குறித்துச் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
சமையலறையில் பதுங்கி இருந்த அந்தப் பாம்பைத் தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு லாவகமாகப் பிடித்து மீட்டனர். பிடிபட்ட பாம்பு பின்னர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. பாம்பை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்குப் பொன் செல்வத்தின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது : இரு சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 9:20:48 PM (IST)

முத்தாலங்குறிச்சி காமராஜ்-க்கு சமூக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைமைத்துவ விருது: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:37:02 PM (IST)

கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சமூக சேவை : தூத்துக்குடி நீதிக்குழுமம் தீர்ப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 7:40:21 PM (IST)

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் : தூத்துக்குடியில் 3 நாள் கருத்தரங்கு தொடக்கம்!
செவ்வாய் 3, மார்ச் 2026 4:10:23 PM (IST)

தூத்துக்குடியில் 102 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம்: அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:58:07 AM (IST)

சிவஞானபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
செவ்வாய் 3, மார்ச் 2026 10:21:30 AM (IST)










