» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளச் சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:51:26 AM (IST)

தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் கிராமத்தில், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பெரிய சாரைப்பாம்பால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் கிராமம் வடக்கு தெருவில் வசிப்பவர் பொன்செல்வம். இவரது வீட்டின் சமையலறைக்குள் இன்று திடீரென 6 அடி நீளமுள்ள பெரிய சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியேறி கதவைப் பூட்டினர்.
உடனடியாக இது குறித்துச் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
சமையலறையில் பதுங்கி இருந்த அந்தப் பாம்பைத் தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு லாவகமாகப் பிடித்து மீட்டனர். பிடிபட்ட பாம்பு பின்னர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. பாம்பை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்குப் பொன் செல்வத்தின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் கிராமம் வடக்கு தெருவில் வசிப்பவர் பொன்செல்வம். இவரது வீட்டின் சமையலறைக்குள் இன்று திடீரென 6 அடி நீளமுள்ள பெரிய சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியேறி கதவைப் பூட்டினர்.
உடனடியாக இது குறித்துச் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
சமையலறையில் பதுங்கி இருந்த அந்தப் பாம்பைத் தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு லாவகமாகப் பிடித்து மீட்டனர். பிடிபட்ட பாம்பு பின்னர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. பாம்பை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்குப் பொன் செல்வத்தின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)









