» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆழ்வார்திருநகரி கோயில் மாசித் திருவிழாவில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 3, மார்ச் 2026 8:17:14 AM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயில் மாசித் திருவிழாவில் கருட சேவை விமரிசையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கருட சேவை விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலின் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 6:30 மணிக்கு திருமஞ்சனமும், நித்தியல் வழிபாடுகளும் நடைபெற்றன.
காலை 8:00 மணியளவில் நம்மாழ்வார் தோளுக்கினியானில் எழுந்தருளி வீதிப் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் முற்பகல் 10:30 மணிக்குச் சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை மற்றும் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சாற்றுமுறை ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. வழிபாட்டிற்குப் பின் பக்தர்களுக்குத் தீர்த்தம், சடாரி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலை 5:00 மணிக்குச் சாயரட்சை வழிபாடு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை இரவு 7:30 மணியளவில் தொடங்கியது. உற்சவர் பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். சுவாமிகள் மாட வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த நிகழ்வில் கோயில் நிர்வாக அதிகாரி சதீஷ், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் ஒன்பதாம் நாளான வரும் 6-ஆம் தேதி புகழ்பெற்ற தேரோட்டமும், அதனைத் தொடர்ந்து 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளன. இதற்கான சிறப்பான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினரும், ஊர் பொதுமக்களும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது : இரு சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 9:20:48 PM (IST)

முத்தாலங்குறிச்சி காமராஜ்-க்கு சமூக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைமைத்துவ விருது: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:37:02 PM (IST)

கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சமூக சேவை : தூத்துக்குடி நீதிக்குழுமம் தீர்ப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 7:40:21 PM (IST)

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் : தூத்துக்குடியில் 3 நாள் கருத்தரங்கு தொடக்கம்!
செவ்வாய் 3, மார்ச் 2026 4:10:23 PM (IST)

தூத்துக்குடியில் 102 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம்: அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:58:07 AM (IST)

வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளச் சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:51:26 AM (IST)










