» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மெட்டில்பட்டி அரசுப் பள்ளியில் வானவியல் பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்

செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:47:38 PM (IST)



மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு டெலஸ்கோப் மூலம் வான்பொருட்களைப் பார்வையிடுவது குறித்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் மாணவர்களுக்கு வானவியல் விழிப்புணர்வு மற்றும் டெலஸ்கோப் பயிற்சி அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் காந்திராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்துமுருகன் கலந்துகொண்டு டெலஸ்கோப்பை கையாளும் முறை மற்றும் தொலைதூரப் பொருட்களைப் பார்வையிடுதல் குறித்துப் பயிற்சி அளித்தார்.

இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு 'நிறமாலை' விழிப்புணர்வு அட்டைகள் மற்றும் வானவியல் காலண்டர்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சாந்தி, நாகலட்சுமி, ஜெயா மேரி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மூலம் இத்தகைய பயிற்சிகள் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory