» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 90-வது ஆண்டு விழா: இலவச மருத்துவ முகாம்

செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:27:44 PM (IST)



இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 90-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 90-வது ஆண்டு தினம் இன்று நாடு முழுவதும் உள்ள கிளைகளில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி சிதம்பர நகரில் அமைந்துள்ள ஐ.ஓ.பி கிளை அலுவலகத்தில் விழா நடைபெற்றது.

1937-ம் ஆண்டு இந்த வங்கியைத் தோற்றுவித்த வங்கியின் நிறுவனர் எம்.சி.டி.எம். சிதம்பரம் செட்டியார் உருவப்படத்திற்கு, வங்கியின் மண்டல மேலாளர் லட்சுமி நரசிம்மன் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஆண்டு விழாவை முன்னிட்டு வங்கி நிர்வாகம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குக் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டன. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.இந்த முகாமில் ஏராளமான வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory