» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரிவாளை வைத்து தகராறில் ஈடுபட்ட 2 ரவுடிகள் கைது
வெள்ளி 16, ஜனவரி 2026 8:48:00 PM (IST)
சாத்தான்குளம் மற்றும் கயத்தாறு ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளை வைத்து தகராறில் ஈடுபட்ட 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் நேற்று பேய்குளம் பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கையில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா சிங் (42) என்பவரை மேற்படி போலீசார் கைது செய்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது கயத்தாறு செட்டிகுறிச்சி பகுதியில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (51) என்பவரை போலீசார் கைது செய்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சாத்தான்குளம் மற்றும் கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராஜாசிங் மீது ஏற்கனவே தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும், செல்லதுரை மீது தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொது அமைதிக்கு பங்கம்: ஒரே நாளில் 5பேர் கைது!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 9:08:45 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: போலீசார் தீவிர கண்காணிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:39:40 PM (IST)

திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா: பிப்.21-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:20:06 PM (IST)

மெட்டில்பட்டி அரசுப் பள்ளியில் வானவியல் பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:47:38 PM (IST)

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:57:55 PM (IST)

தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் ரூ.12லட்சம் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:31:41 PM (IST)










