» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரிவாளை வைத்து தகராறில் ஈடுபட்ட 2 ரவுடிகள் கைது

வெள்ளி 16, ஜனவரி 2026 8:48:00 PM (IST)

சாத்தான்குளம் மற்றும் கயத்தாறு ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளை வைத்து தகராறில் ஈடுபட்ட 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர்  ஸ்டீபன் தலைமையிலான போலீசார் நேற்று பேய்குளம் பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கையில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா சிங் (42) என்பவரை மேற்படி போலீசார் கைது செய்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.

அதேபோன்று கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர்  ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது கயத்தாறு செட்டிகுறிச்சி பகுதியில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (51) என்பவரை போலீசார் கைது செய்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சாத்தான்குளம் மற்றும் கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராஜாசிங் மீது ஏற்கனவே தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும், செல்லதுரை மீது தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory