» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்பிக் - கிரீன்ஸ்டார் உர தொழிற்சாலையில் 55-வது தேசிய பாதுகாப்பு வார விழா!
செவ்வாய் 17, மார்ச் 2026 12:33:07 PM (IST)

தூத்துக்குடி ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர தொழிற்சாலையில், 55-வது தேசிய பாதுகாப்பு வார விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் சித்தார்த்தன், தேசிய பாதுகாப்பு வார விழாவினை கொடியேற்றித் தொடங்கி வைத்தார். அவரது தலைமையில் ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து 'பாதுகாப்பு உறுதிமொழி' எடுத்துக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஸ்பிக் நகர் SMAC IAC அரங்கில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு சாதனங்கள் குறித்த பொருட்காட்சியையும் கூடுதல் இயக்குநர் திறந்து வைத்துப் பார்வையிட்டார். தேசிய பாதுகாப்பு வார விழாவின் நிறைவு விழாவில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பாதுகாப்பு வார விழாவையொட்டி தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு: ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு
புதன் 18, மார்ச் 2026 8:41:29 AM (IST)

பட்டினமருதூரில் அகழாய்வு பணிகள் விறுவிறுப்பு!
புதன் 18, மார்ச் 2026 8:32:04 AM (IST)

பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் சேவையில் மாற்றம்: இன்று முதல் மாற்றுப்பாதையில் இயக்கம்!
புதன் 18, மார்ச் 2026 8:19:06 AM (IST)

கோவில்பட்டியில் இடி, மின்னலுடன் பலத்த மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி !
புதன் 18, மார்ச் 2026 8:15:42 AM (IST)

பாஜக தலைமை அனுமதித்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி: தமிழிசை பேட்டி
புதன் 18, மார்ச் 2026 8:06:29 AM (IST)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன் ரீல்ஸ் எடுத்த இளம்பெண்கள் மீது புகார் - போலீசார் விசாரணை
புதன் 18, மார்ச் 2026 7:58:59 AM (IST)








