» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாஜக தலைமை அனுமதித்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி: தமிழிசை பேட்டி
புதன் 18, மார்ச் 2026 8:06:29 AM (IST)
கட்சித் தலைமை முடிவு செய்தால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது: "திருமாவளவன் போன்ற தலைவர்கள், நாங்கள் கூட்டணிக்காக மற்றவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், பாஜக சார்பில் கூட்டணி குறித்து யாருக்கும் எந்தவித நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மதவாதம் மற்றும் மதக்கலவரங்கள் ஏற்படும் எனத் திட்டமிட்டுப் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகின்றனர்.""வருகிற 19-ஆம் தேதி பாஜகவின் தேர்தல் அறிக்கை கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன் பிறகு முறைப்படி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். கட்சித் தலைமை விரும்பினால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேன்," என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு: ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு
புதன் 18, மார்ச் 2026 8:41:29 AM (IST)

பட்டினமருதூரில் அகழாய்வு பணிகள் விறுவிறுப்பு!
புதன் 18, மார்ச் 2026 8:32:04 AM (IST)

பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் சேவையில் மாற்றம்: இன்று முதல் மாற்றுப்பாதையில் இயக்கம்!
புதன் 18, மார்ச் 2026 8:19:06 AM (IST)

கோவில்பட்டியில் இடி, மின்னலுடன் பலத்த மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி !
புதன் 18, மார்ச் 2026 8:15:42 AM (IST)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன் ரீல்ஸ் எடுத்த இளம்பெண்கள் மீது புகார் - போலீசார் விசாரணை
புதன் 18, மார்ச் 2026 7:58:59 AM (IST)

மாணவி கொலை: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி செல்போன் கடைகள் அடைப்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 9:17:38 PM (IST)








