» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கனிமவள கொள்ளை, ஆக்கிரமிப்புகளை தடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 4:54:50 PM (IST)

கனிமவள கொள்ளை, கோவில் சொத்துக்கள் அபகரிப்பை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் பேரரசு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் சாலை, நீர்நிலை, அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறும் பணிகள் குறித்து மாதம் ஒரு முறை நேரில் ஆய்வு செய்ய வேண்டும், அரசு நூலகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், தனியார் சந்தை வழக்கு, இளையரசனேந்தல் சேவை சாலை வழக்கு ஆகியவற்றை அரசு சார்பில் விரைந்து நடத்தி முடிக்க வேண்டும், கனிமவள கொள்ளை, கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தமிழ் பேரரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் வழக்கறிஞர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மு.கணேசன், மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் லட்சுமணபாண்டியன், இளைஞரணி செயலாளர் இசக்கிமுத்து, மாவட்ட பொருளாளர் குமார், குருநாதன் மற்றும் சமூக ஆர்வலர்கள் ராஜேசு கண்ணா, பரமசிவம், சுதாகர், பால்ராஜ், ராஜா, ராஜசிம்மன், முருகன், விவசாய அணி தலைவர் அருமைராஜ், நாம் தமிழர் கட்சி காமநாயக்கன்பட்டி பொறுப்பாளர் ஆரோக்கியராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது : இரு சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 9:20:48 PM (IST)

முத்தாலங்குறிச்சி காமராஜ்-க்கு சமூக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைமைத்துவ விருது: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:37:02 PM (IST)

கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சமூக சேவை : தூத்துக்குடி நீதிக்குழுமம் தீர்ப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 7:40:21 PM (IST)

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் : தூத்துக்குடியில் 3 நாள் கருத்தரங்கு தொடக்கம்!
செவ்வாய் 3, மார்ச் 2026 4:10:23 PM (IST)

தூத்துக்குடியில் 102 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம்: அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:58:07 AM (IST)

வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளச் சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:51:26 AM (IST)










