» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
வியாழன் 11, டிசம்பர் 2025 12:13:51 PM (IST)
தூத்துக்குடி பக்கிள் ஓடையை 5 மீட்டர் அகலப்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில் நடைபெற்றது. மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டுராஜா முன்னிலை வகித்தார். முகாமை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது "பாதாளக் சாக்கடை திட்டத்தில் இதுவரை இணைப்பு பெறாதவர்களுக்கு இணைப்பு பெற வேண்டும். அப்போதுதான் இந்த பகுதியில் சாலைகள் அமைக்க முடியும்.
மேற்கு மண்டலத்தில் மட்டும் 110 சாலைகள் போட வேண்டியுள்ளது. மழைக்காலம் முடிந்ததும் பணிகள் நடைபெறும். அதற்குள் பாதாள சாக்கடை இணைப்பு பணிகளை முடிக்க வேண்டும். பக்கிள் ஓடை 5 மீட்டர் அகலப்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதுபோல் ராஜாஜி பூங்கா விரிவுபடுத்தப்பட உள்ளது. தற்போது போடப்படும் கால்வாய்கள் மூடி போட்டு அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
தெப்பக்குளத்தில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது தண்ணீரை வெளியேற்றியதால் இரண்டு பக்கம் ஆறடிக்கு இடிந்தது இதை சீரமைக்கும் பணி காலையிலே தொடங்கி நடந்து வருகிறது என்று தெரிவித்தார். பின்னர் பொதுமக்களிடமிருந்து 32 மனுக்களை பெற்றார். நிகழ்ச்சியில் மாநகர சுகாதார அலுவலர் சரோஜா மாநகராட்சி கவுன்சிலர்கள் கனகராஜ். விஜயலட்சுமி, பொன்னப்பன், பொன்னப்பன், ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது : இரு சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 9:20:48 PM (IST)

முத்தாலங்குறிச்சி காமராஜ்-க்கு சமூக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைமைத்துவ விருது: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:37:02 PM (IST)

கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சமூக சேவை : தூத்துக்குடி நீதிக்குழுமம் தீர்ப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 7:40:21 PM (IST)

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் : தூத்துக்குடியில் 3 நாள் கருத்தரங்கு தொடக்கம்!
செவ்வாய் 3, மார்ச் 2026 4:10:23 PM (IST)

தூத்துக்குடியில் 102 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம்: அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:58:07 AM (IST)

வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளச் சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:51:26 AM (IST)










