» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.75லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: டிரைவர் கைது
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:27:45 AM (IST)

தூத்துக்குடியில் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த ரூ.75லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் கடலோர காவல் படை ஆய்வாளர் பேச்சிமுத்து உத்தரவில் வேம்பார் சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த பொலிரோ பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த வாகனத்தில் எவ்வித அனுமதியும் இல்லாமல் 32 மூட்டைகளில் மான்செஸ்டர் யுனைடெட் கிங்டம் சிகரெட் பாக்கெட்டுகள் மொத்தம் 6,40,000 சிகரெட்கள் இருந்தன. இதன் மதிப்பு மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் ஆகும். இதுகுறித்து வாகனத்தை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் கந்தசாமி இராஜேஷ் (52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)










