» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விடுதி உரிமையாளர் உள்பட இருவருக்கு அரிவாள் வெட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு

திங்கள் 11, ஆகஸ்ட் 2025 8:22:23 AM (IST)

தூத்துக்குடியில் தனியார் விடுதிக்குள் நுழைந்து  உரிமையாளர் உள்பட 2 பேரை வெட்டிய சம்பவம் குறித்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி, போல்பேட்டையைச் சேர்ந்தவர் முருகானந்தம் (56). இவர், எட்டயபுரம் சாலையில் தனியார் விடுதி நடத்தி வருகிறார். இதில், துப்புரவுப் பணியாளராக லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த பார்வதி பணியாற்றி வருகிறார். நேற்று மாலையில் பார்வதியின் மகன் செல்வம், மற்றும் அவரது நண்பரும் விடுதிக்கு வந்துள்ளனர்.

மேலும், முருகானந்தம் மற்றும் பார்வதியிடம் தகராறு செய்ததோடு, அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டனராம். இதில், பலத்த காயமடைந்த முருகானந்தம், பார்வதி ஆகியோர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வடபாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory