» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்: 26-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
ஞாயிறு 20, ஜூலை 2025 9:52:54 AM (IST)

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி வருகிற 26-ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
தென்னகத்தின் தொழில்நகரமாக உருவாகி உள்ள தூத்துக்குடியில், 1992-ம் ஆண்டு விமான நிலையம் திறக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் பறந்தது. தற்போது 2 தனியார் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கு 9 விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதனை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவதால், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ.381 கோடி செலவில் விரிவாக்க பணிகள் மேற்காள்ளப்பட்டன. இதில் 1,350 மீட்டர் விமான ஓடுதளம் 3 ஆயிரம் மீட்டர் நீள ஓடுதளமாக மாற்றப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலும், பல்வேறு வசதிகளுடனும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், வருகிற 26-ம் தேதி பிரதமர் மோடி, தூத்துக்குடி புதிய விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். பிரதமர் வருகையையொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மக்கள் கருத்து
Anthony Raj RJul 24, 2025 - 03:23:13 AM | Posted IP 162.1*****
வள்ளியூர் திருச்செந்தூர் சாலை விஞ் கிடப்பில் போடப்பட்டு பல வருடங்கள் ஆகிறது? தூத்துக்குடி கன்னியாகுமரி கிழக்கு கிழக்கு கடற்கரை சாலை என்னாச்சு? தென் மாவட்டத்தை புறக்கணிக்கும் மத்திய மாநில அரசுகள்? அனல் மின் நிலையம் அணு மின் நிலையம் ராக்கெட் ஏவுதளம் இதற்கு மட்டும் தென் மாவட்ட மக்களின் நிலங்களை அழிக்க வேண்டும் ?? அவர்களுக்கு தேவையான உள் கட்டமைப்பை செய்து கொடுக்க மனமில்லை? கடும் கண்டனத்துக்குரியது...
inbaJul 22, 2025 - 07:59:01 AM | Posted IP 172.7*****
super
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)











MvmmuruganJul 24, 2025 - 02:39:37 PM | Posted IP 172.7*****