» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு: ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு!

சனி 12, ஜூலை 2025 12:31:56 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு மையங்களை நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வுகளுக்கான தொகுதி - IV தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.  தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஏரல், எட்டயபுரம், கயத்தார், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், விளாத்திகுளம் ஆகிய வட்டங்களுக்குட்ப்பட்ட 101 இடங்களில் 127 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்ற‌து. 

மேலும், இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 37000க்கும் மேற்பட்டோர் தேர்வுகள் எழுதினர். குரூப் 4 தேர்வு மையங்களான எட்டயபுரம் மகாகவி பாரதியார் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குமாரகிரி சி.கே.டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு செய்தார்.

தேர்வினை கண்காணிப்பதற்காக 31 நடமாடும் குழுக்களும், 14 பறக்கும் படை குழு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த‌து. மேலும், தேர்வு அறையில் தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory