» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 5½ பவுன் நகை பறிப்பு : தம்பதி கைது

சனி 12, ஜூலை 2025 7:48:21 AM (IST)

திருச்செந்தூர் அருகே தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 5½ பவுன் தாலி சங்கிலி பறித்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி கஸ்பாவை சேர்ந்த நாகராஜ் மனைவி பகவதி. சம்பவத்தன்று பகவதி வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட ஒரு பெண் பகவதி வீட்டிற்கு சென்று, உன் கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளது. அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும், அதனால் உனக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். 

இதைக் கேட்ட அவர், அந்த பெண்ணை வீட்டிற்குள் அழைத்துள்ளார். அந்த பெண் கூறியவாறு ஒரு தம்ளர் தண்ணீரில் 5½ பவுன் தாலி சங்கிலியை கழற்றி போட்டுள்ளார். பின்னர் அந்தப் பெண் மந்திரம் சொல்வது போல் சொல்லிவிட்டு, பகவதியின் முகத்தில் குங்குமத்தை வீசி விட்டு, தம்ளரில் இருந்த 5½ பவுன் தாலி சங்கிலியுடன் வீட்டிலிருந்து தப்பி சென்று விட்டாராம். 

இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ஏரல் அருகில் சூளைவாய்கால் பகுதியை சேர்ந்த விமலா (27), அவருக்கு உடந்தையாக இருந்த கணவர் விஜய் (28) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த 5½ பவுன் செயினையும் மீட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory