» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்க பணிகள் : ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு
சனி 12, ஜூலை 2025 7:47:46 AM (IST)

ஸ்ரீவைகுண்டத்தில் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் மேற்கொள்ளப்படும் அரசு மருத்துவமனை விரிவாக்க பணிகளை ஆட்சியர் இளம்பகவத் நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100வது பிறந்தநாள் விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டு, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை அருகிலுள்ள பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் விரிவாக்க பணிகளுக்கான ஆரம்ப கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற உள்ள பழைய தாலுகா அலுவலக வளாகத்தையும் நேற்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மருத்துவமனை விரிவாக்கத்திற்கான கட்டிட அமைப்பு குறித்து கட்டிட பிரிவு பொதுப்பணித்துறையினரிடம் கேட்டறிந்தார்.
புதிய கட்டிடம் அமையும் இடம் நெருக்கடி மிகுந்ததாக இருக்கும் என்பதால் பயன்பாடற்று இருக்கும் பழைய தாலுகா அலுவலக கட்டிடங்களை இடித்துவிட்டு போதிய இடவசதியுடன் மருத்துவமனை விரிவாக்க கட்டிடம் அமைய வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும், தீயணைப்பு நிலையத்திற்கு என புதுக்குடியில் செயல்படும் புதிய தாலுகா அலுவலகம் அருகே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தீயணைப்புத் துறையினர் அங்கு உடனடியாக செல்ல வேண்டும் எனவும் ஆட்சியர் இளம் பகவத் உத்தரவிட்டார்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள், பழைய தாலுகா அலுவலகம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை இடமாற்ற வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆய்வின்போது, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்னசங்கர், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆத்திகுமார் மற்றும் பொதுப்பணித்துறையினர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)










