» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயிலில் மகாராஷ்டிர ஆளுநர் தரிசனம்
சனி 12, ஜூலை 2025 7:36:43 AM (IST)

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த அவரை, கோட்டாட்சியர் சுகுமாறன், டிஎஸ்பி மகேஷ்குமார், கோயில் நிர்வாகத்தினர் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அவர் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், கோயில் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் ஆளுநர் கூறியதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு அதிக சிரத்தை எடுத்து குடமுழுக்கை நடத்தி இருக்கிறார்கள். கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் கூட கடவுளை வணங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.
அப்போது, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாவட்டத் தலைவர்கள் முத்துபலவேசம் (திருநெல்வேலி), தூத்துக்குடி தெற்கு சித்ராங்கதன், நவமணிகண்டன், திருச்செந்தூர் நகரத் தலைவர் செல்வகுமரன், நகரப் பொருளாளர் பலவேச கண்ணன், நிர்வாகிகள் வினோத் சுப்பையன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)











முன்னாள் தூத்துக்குடிJul 12, 2025 - 01:20:24 PM | Posted IP 172.7*****