» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே விழுந்து காவலர் பலி : தூத்துக்குடி அருகே சோகம்
வியாழன் 19, ஜூன் 2025 10:15:38 AM (IST)
வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் 2 மாதங்களுக்கு முன்பு ஓட்டை விழுந்தது இதனால் வாகனங்கள் அனைத்தும் ஒருவழிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று பாலத்தில் நெல்லை மாவட்டம் கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பேரிகார்டில் எதிர்பாராத விதமாக மோதியதில் படுகாயம் அடைந்தார் இதுகுறித்து, தகவல் அறிந்த முறப்பநாடு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் பாளையங்கோட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இரவில் பாலத்தில் இருள் சூழ்ந்திருந்த வேளையில் ஆங்காங்கே கிடந்த பேரிகார்டுகளை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர்.
முறப்பநாடு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் தென்காசி மாவட்டம், ஆலங்குளம், முத்துகிருஷ்ணபேரி காமராஜர் நகரைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சங்கர் குமார் (31) என்பவர் பேரிகார்டுகளை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் தடுப்புச் சுவரில் கை வைத்த போது, பேலன்ஸ் கிடைக்காமல் எதிர்பாராத விதமாக, ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.
இதையடுத்து மற்ற காவலர்கள் அவரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பவம் நடந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., அல்பர்ட் ஜான், ரூரல் டிஎஸ்பி சுகீர் மற்றும் போலீசார் பார்வையிட்டனர் மேலும் பலியான போலீஸ்காரர் சங்கர்குமார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த காவலருக்கு சௌமியா என்ற மனைவியும், ஒரு வயதில் மகனும் உள்ளனர். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)











M BabuJun 20, 2025 - 08:00:32 AM | Posted IP 172.7*****